தமிழ் நாடு தமிழ்த் தாய் தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல் தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம் | ||||
ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். | 1 | |||
மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்; ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். | 2 | |||
கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல காற்றையும் வான வெளியையும சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். | 3 | |||
சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். | 4 | |||
நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச் சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். | 5 | |||
கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன் காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் என்னென்ன வோபெய ருண்டு-பின்னர் யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்! | 6 | |||
தந்தை அருள்வலி யாலும்-முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கணமட்டும் காலன்-என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். | 7 | |||
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! | 8 | |||
"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. | 9 | |||
சொல்லவும் கூடுவ தில்லை-அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" | 10 | |||
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ? சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! | 11 | |||
தந்தை அருள்வலி யாலும்-இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும்-புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
இந்த பாடலின் 12 வது பத்தியில் ”இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும்” என்றும் 7 வது பத்தியில் “முன்பு சான்ற புலவர் தவவலி யாலும்” என்றும் பாரதி கூறுவது, பலகேள்விகளை எழுப்புகிறது. ஏன் பாரதி இவ்வாறு எழுதவேண்டும்? மேலும் இப்பாடலின் 10 வது பத்தியில் “மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்” என்று சொல்வதில் ”மேற்கு மொழி” என்று குறிப்பிடுவது எந்த மொழியை? தமிழ் சாகாமல் இருக்க செய்யவேண்டியது யாது? |
Saturday 28 December 2019
தமிழ்த் தாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment